COVID-19 Update Learn More
reset
search

Tamil

ஈஸ்டர்ன் பாலியேட்டிவ் கேர் (EPC) என்பது லாப நோக்கமற்ற குடும்ப அடிப்படையிலான நோய்த்தடுப்பு பராமரிப்பு சேவையாகும். இது தனிநபர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும், ஆயுளைக் குறைக்கும் அல்லது தீர்க்க முடியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முழு அளவிலான ஆதரவு திட்டங்களை வழங்குகிறது. நோய்கள். சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், உள்ளூர் மருத்துவமனைகள், சிகிச்சையளிக்கும் நிபுணர்கள், அதனுடன் தொடர்புடைய சுகாதார வல்லுநர்கள், சுயமாக அல்லது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பரிந்துரைக்கப்படலாம்.

உங்கள் வீட்டிலேயே கட்டணமில்லா இலவச சிறப்பு பாலியேட்டிவ் கேர் சேவைகளை EPC வழங்குகிறது

விக்டோரியாவில் சமூக அடிப்படையிலான பாலியேட்டிவ் கேர் சேவைகளின் மிகப்பெரிய ஒற்றை வழங்குநராக EPC உள்ளது. எங்கள் சேவைகள் போரூண்டரா, மன்னிங்ஹாம், மரூண்டா, மோனாஷ், வைட்ஹார்ஸ், நாக்ஸ் மற்றும் யர்ரா மலைத்தொடர் ஆகிய உள்ளூராட்சி பகுதிகளில் வழங்கப்படுகின்றன.

 

பாலியேட்டிவ் கேர் தேவை

ஆயுளைக் குறைக்கும் அல்லது தீர்க்க முடியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு EPC சிறப்பு பாலியேட்டிவ் கேர் சேவையைவழங்குகிறது.

நீங்கள் பின்வரும் பகுதிகளுள் ஒன்றில் வாழ்ந்தால் மட்டுமே EPC சேவைகளை உங்களுக்கு வழங்க முடியும்:

  • போரூண்டரா
  • மன்னிங்ஹாம்
  • மரூண்டா
  • வைட்ஹார்ஸ்
  • மோனாஷ்
  • நாக்ஸ்
  • யர்ரா மலைத்தொடர்

மேலே உள்ள இரண்டு வகைகளிலும் நீங்கள் பொருந்துகிறீர்கள் என்றால், உங்களை நீங்களே EPCக்குப் பரிந்துரைக்க விரும்பினால், தயவுசெய்து ஒரு பரிந்துரைப் படிவத்தைப் பூர்த்தி செய்ய கீழே கிளிக் செய்யவும். மாற்றாக, நீங்கள் 1300 130 813 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்

பரிந்துரைப் படிவம்

மேலே உள்ள பகுதிகளுள் ஒன்றில் நீங்கள் வசிக்கவில்லை என்றால், உங்கள் பகுதிக்கான சரியான சேவையைக் கண்டறிய பாலியேட்டிவ் கேர் விக்டோரியா வலைத்தளத்தைப் பார்வையிடவும் – பாலியேட்டிவ் கேர் விக்டோரியா

 

நான் ஒருவருக்காக அக்கறை கொண்டிருக்கிறேன்

ஆயுளைக் குறைக்கும் அல்லது தீர்க்க முடியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு EPC சிறப்பு பாலியேட்டிவ் கேர் சேவையை வழங்குகிறது.

பின்வரும் பகுதிகளுள் ஒன்றில் வாழ்பவர்களுக்கு மட்டுமே EPC சேவைகளை வழங்க முடியும்:

  • போரூண்டரா
  • மன்னிங்ஹாம்
  • மரூண்டா
  • வைட்ஹார்ஸ்
  • மோனாஷ்
  • நாக்ஸ்
  • யர்ரா மலைத்தொடர்

நீங்கள் அக்கறை கொள்பவர் மேலே உள்ள இரண்டு வகைகளிலும் பொருந்துபவராக இருந்து, அவரை நீங்கள் EPCக்குப் பரிந்துரைக்க விரும்பினால், ஒரு பரிந்துரைப் படிவத்தைப் பூர்த்தி செய்ய கீழே கிளிக் செய்யவும். மாற்றாக, நீங்கள் 1300 130 813 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் – நீங்கள் பரிந்துரைப்பவர் இதற்கு சம்மதித்தால் மட்டுமே நீங்கள் பரிந்துரைக்க முடியும்.

பரிந்துரைப் படிவம்

மேலே உள்ள பகுதிகளுள் ஒன்றில் நீங்கள் வசிக்கவில்லை என்றால், உங்கள் பகுதிக்கான சரியான சேவையைக் கண்டறிய பாலியேட்டிவ் கேர் விக்டோரியா வலைத்தளத்தைப் பார்வையிடவும் – பாலியேட்டிவ் கேர் கவனிப்பு விக்டோரியா 

 

நான் ஒரு சுகாதார நிபுணர்

போரூண்டரா, மன்னிங்ஹாம், மரூண்டா, மோனாஷ், வைட்ஹார்ஸ், நாக்ஸ் மற்றும் யர்ரா மலைத்தொடர் ஆகிய உள்ளூராட்சி பகுதிகளில் வசித்தால், பாலியேட்டிவ் கேர் தேவைப்படும் எவரும் எங்கள் சேவைக்கு பரிந்துரைக்கப்படலாம்.

பின்வரும் தகவல் உடல்நல நிபுணர்களுக்கு மட்டுமே

நீங்கள் ஒரு உடல்நல நிபுணர் இல்லையென்றால்கீழேயுள்ள பரிந்துரைப் படிவம் பொத்தானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் ஆன்லைன் பரிந்துரையைச் சமர்ப்பிக்கத் தொடரலாம்.

EPC பரிந்துரைகளுக்குப் பின்வரும் அளவுகோல்கள் பொருந்தும்:

  • வாடிக்கையாளருக்கு ஒரு முற்போக்கான, ஆயுளைக் குறைக்கும் நோய் உள்ளது
  • வாடிக்கையாளருக்கு சிக்கலான அறிகுறி மேலாண்மை பிரச்சனைகள் உள்ளன, அவற்றில் தற்போதைய கவனிப்புக் குழுவால் கவனம் செலுத்த முடியாது
  • வாடிக்கையாளர் அல்லது அவர்களுக்காக முடிவெடுப்பவர் பாலியேட்டிவ் கேர் பற்றி அறிந்தவராகவும், அதற்கான பரிந்துரைக்கு ஒப்புக்கொள்கிறவராகவும் இருக்க வேண்டும்
  • அறிகுறிகளைக் கட்டுப்படுத்துதல், செயல்பாட்டை அதிகப்படுத்துதல், மனரீதியான சமூக ஆதரவை வழங்குதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பராமரித்தல் ஆகியவை EPC சேவைகளுக்கான முதன்மை குறிக்கோள்கள் ஆகும்.

ஆன்லைன் பரிந்துரைப் படிவத்தை பூர்த்தி செய்வதுடன் கூடுதலாக:

உங்கள் பரிந்துரையைச் செயலாக்குவதில் ஏற்படக்கூடிய தாமதத்தைத் தவிர்க்க, தொடர்புடைய அனைத்து மருத்துவ தகவல்களின் நகல்களும் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும்: எ.கா. தற்போதைய மருந்து பட்டியல், சேர்க்கை தாள் / பதிவு தாள், ஸ்கேன்கள், இரத்தம், தொடர்புடைய நிபுணர் கடிதங்கள் மற்றும் மருத்துவரின் குறிப்புகள்.

இந்த தகவல்பரிந்துரை படிவம் (ஆவணமாக்கல் தாவல்அல்லது தொலைநகல் (03) 9873 0919 வழியாகப் பதிவேற்றப்பட வேண்டும்

பரிந்துரை அவசரமாக இருந்தால்எங்கள் உள்தொடர்பு செவிலியைத் தொடர்பு கொள்ளவும்1300 130 813

கீழே உள்ள பரிந்துரைப் படிவம் பொத்தானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆன்லைன் பரிந்துரைக்குச் செல்லவும்.

பரிந்துரை செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்

 

ஈஸ்டர்ன் பாலியேட்டிவ் கேர் அறிமுகம்

ஈஸ்டர்ன் பாலியேட்டிவ் கேர் கழகம் ஒன்றிணைக்கப்பட்டது (EPC) என்பது மெல்போர்னின் கிழக்கு பிராந்தியத்திற்கான சிறப்பு சமூக அடிப்படையிலான பாலியேட்டிவ் கேர் சேவையாகும். எங்கள் சேவைகள் போரூண்டரா, மன்னிங்ஹாம், மரூண்டா, மோனாஷ், வைட்ஹார்ஸ், நாக்ஸ் மற்றும் யர்ரா மலைத்தொடர் ஆகிய உள்ளூராட்சி பகுதிகளில் வழங்கப்படுகின்றன.

உடல், உளவியல், உணர்ச்சி அல்லது ஆன்மீகம் போன்ற சிக்கலான அறிகுறிகளைக் கொண்ட ஒரு தீரா நோய் / ஆயுளைக் குறைக்கும் நோய் உள்ளவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். சுகாதாரக் கவனிப்புத் தரநிலைகளுக்கான ஆஸ்திரேலிய மன்றம் (ACHS) மூலம் EPC முழுமையான அங்கீகாரம் பெற்றிருக்கிறது. சேவை வழங்கலின் அனைத்து மட்டங்களிலும் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை இதனால் உறுதி செய்கிறது.

ஈஸ்டர்ன் பாலியேட்டிவ் கேர்என்பது ஆர்டர் ஆஃப் மால்டா, அவுட்டர் ஈஸ்ட் பாலியேட்டிவ் கேர் சர்விஸ் இங்க மற்றும் புனித வின்சென்ட் மருத்துவமனை (மெல்போர்ன்) லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.

தீரா நோய் / ஆயுளைக் குறைக்கும் நோய் உள்ள ஒருவர் கீழே கொடுக்கப்பட்டுள்ளதைத் தேர்வு செய்யலாம் என்பதை EPC அங்கீகரிக்கிறது:

  • தங்கள் சொந்த வீட்டின் வசதியிலேயே கவனிக்கப்படுதல்
  • முடிந்தவரை இயல்பாக வாழுதல்
  • அறிகுறிகளை நிர்வகிக்க சிறப்பு பாலியேட்டிவ் கேர்செவிலியர்களின் உதவி பெறுதல்
  • தங்கள் சொந்த மருத்துவரின் தொடர்ச்சியான கவனிப்பில் இருத்தல்
  • அவர்களின் குடும்பம் அல்லது கவனிப்பாளர்களின் ஆதரவில் இருத்தல்
  • தவிர்க்க முடியாமல் கடுமையான நோய்களுடன் (உணர்ச்சி, சமூக, நிதி, உளவியல் மற்றும் ஆன்மீகம்) வரும் முடிவுகள் மற்றும் தனிப்பட்ட சரிப்படுத்துதல்கள் மூலம் ஆதரிக்கப்படுதல்.

பாலியேட்டிவ் கேர் என்றால் என்ன?

தீரா நோய் / ஆயுளை குறைக்கும் நோய் உள்ள ஒரு நபரின் சிறப்புத் தேவைகளை பாலியேட்டிவ் கேர் அங்கீகரிக்கிறது.

வாடிக்கையாளர்களின் அறிகுறிகளில் உதவுவதன் மூலமும், வாழ்க்கையை எளிதாகவும் வசதியாகவும் மாற்றி அமைக்க அவர்களுக்கு உதவுவதன் மூலமும் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே கவனிப்பின் நோக்கமாகும்.

பாலியேட்டிவ் கேர், தங்களுடைய சிகிச்சை விருப்பங்களை சிகிச்சை பெறுபவர் கட்டுப்படுத்துவதில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் அவர்களின் பராமரிப்பாளர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆதரவை வழங்குகிறது.

இதில் நிபுணத்துவ பாலியேட்டிவ் கேர் மருத்துவர்கள், செவிலியர்கள், குடும்ப ஆதரவுத் தொழிலாளர்கள், இழப்படைந்த குடும்பத்திற்கான ஆதரவுத் தொழிலாளர்கள், இசை, மசாஜ் மற்றும் தொழில்சார் சிகிச்சையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பராமரிப்புகளை வழங்கும் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் உள்ளனர். கவனிப்பை வழங்குவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் துணைபுரிகின்றனர்.

நபரின் சொந்த வீட்டில், வயதானோர் குடியிருப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு வசதிகள் உட்பட, அந்த நபர் எங்கு வாழ்கிறார் மற்றும் வாழ்வின் கடைசிக் காலத்தில் அவர்கள் எங்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் தேர்வுசெய்கிறார்கள் என்பதைப் பொறுத்து பாலியேட்டிவ் கேர் வழங்கப்படுகிறது.

தற்போது கிடைக்கக்கூடிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சேவைகளின் வரம்பை பாலியேட்டிவ் கேர் பூர்த்தி செய்கிறது.

பாலியேட்டிவ் கேர்:

  • வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது மற்றும் இறப்பதை ஒரு சாதாரண செயல்முறையாகக் கருதுகிறது
  • மரணத்தை விரைவுபடுத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ இல்லை
  • வலி மற்றும் பிற துன்பகரமான அறிகுறிகளிலிருந்து நிவாரணம் வழங்குகிறது
  • கவனிப்பின் உடல், உளவியல், சமூக, உணர்வு மற்றும் ஆன்மீக அம்சங்களை ஒருங்கிணைக்கிறது
  • இறக்கும் வரை மக்கள் முடிந்தளவு சுறுசுறுப்பாக வாழ உதவும் ஒரு ஆதரவான சூழலை வழங்குகிறது
  • நபரின் நோய் மற்றும் அவர்களின் சொந்த மரணத்தின் போது குடும்பத்தை சமாளிக்க உதவ ஒரு ஆதரவான சூழலை வழங்குகிறது
  • இறந்து கொண்டிருக்கும் அனைத்து வயதினருக்கும் பாலியேட்டிவ் கேர் வழங்கப்படுகிறது.

நோக்கம்

சேவையில் ஒன்றாக ~ கவனிப்பில் கரிசனையாக ~ செயலில் தலைமைத்துவமாக

குறிக்கோள்

இறக்கும் நபரையும் அவர்களின் பராமரிப்பாளர்களையும் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பராமரிப்பதற்கும், அவர்களுக்குத் துணையாக இருப்பதற்கும், அவர்களின் ஆன்மீக, உடல்ரீதியான, உணர்வு, கலாச்சார மற்றும் சமூகத் தேவைகளை மதித்து அவர்களின் கௌரவத்தை நிலைநிறுத்துவதற்கும், ஈஸ்டர்ன் பாலியேட்டிவ் கேர் பாக்கியம் பெற்றிருக்கிறது. நாங்கள் வழங்கும் இறப்பு சேவைகளில் குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு எங்கள் கவனிப்புத் தொடர்கிறது.

நோக்க அறிக்கை

உயிருக்கு ஆபத்தான அல்லது ஆயுளைக் குறைக்கும் நோயுடன் வாழும் நபரின் தேவைகள், அவர்களின் குடும்பம் மற்றும் பராமரிப்பாளர்கள், மற்றும் வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்துதல், வலி மற்றும் துன்பங்களைத் தணித்தல் மற்றும் துக்கம் மற்றும் இறப்பு காலத்தில் ஆறுதலளித்தல் ஆகியவற்றுடன் கவனம் செலுத்துகின்ற ஒரு ஒருங்கிணைந்த உடல்நோவு தணிக்கும் கவனிப்பை வழங்குவது.

EPC என்பது லாப நோக்கற்ற சேவையாகும். இது தனிநபர்கள், மற்றும் ஆயுளைக் குறைக்கும் அல்லது தீரா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் முழு அளவிலான ஆதரவு திட்டங்களை வழங்குகிறது. சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், உள்ளூர் மருத்துவமனைகள், சிகிச்சையளிக்கும் நிபுணர்கள், தொடர்புடைய சுகாதார வல்லுநர்கள், சுயமாக அல்லது குடும்ப உறுப்பினர்களால் வாடிக்கையாளர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

விக்டோரியாவில் சமூக அடிப்படையிலான பாலியேட்டிவ் கேர் சேவைகளின் மிகப்பெரிய ஒற்றை வழங்குநராக EPC உள்ளது. போரூண்டரா, மன்னிங்ஹாம், மரூண்டா, மோனாஷ், வைட்ஹார்ஸ், நாக்ஸ் மற்றும் யர்ரா மலைத்தொடர் ஆகிய உள்ளூராட்சி பகுதிகளில் EPC சேவைகள் வழங்கப்படுகின்றன. பல சமூக மற்றும் சுகாதார கவனிப்பு வழங்குநர்களுடன் முறையான உறவுகளை EPC உருவாக்கியுள்ளது. குறிப்பாக, போல்டன் கிளார்க்குடனான உறவு என்பது பிராந்தியத்திற்கான முறையான பகிரப்பட்ட கவனிப்பு ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது. சிறப்பான ஒருங்கிணைந்த பராமரிப்பை உயர் தரத்தில் வழங்கி, வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் வீட்டிலேயே இருக்கவும், அவர்கள் எங்கு இறக்கிறார்கள் என்பது குறித்து தெரிவுசெய்ய உதவும் வகையில் மிக உயர்ந்த சேவையை வழங்குவதே இதன் நோக்கம். பாலியேட்டிவ் கேர் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சமூக சேவையாளர்கள், ஆயர் பராமரிப்பு தொழிலாளர்கள், தொடர்புடைய சுகாதார சிகிச்சையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகிய அனைவரும் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உயர்தர பலன்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்ச்சிகளில் மசாஜ் மற்றும் இசை சிகிச்சை, துக்கம் மற்றும் இறப்பு சேவைகள் (பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான குழு திட்டங்கள்); மற்றும் பாலியேட்டிவ் கேர் தன்னார்வலர்கள் போன்றவைகளை உள்ளடக்கிய கிரமமாக இணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார சிகிச்சைகள் திட்டம் அடங்கும்; EPC க்கான நிதி மாநில அரசு, சமூக நிதி திரட்டல், நன்கொடைகள் மற்றும் சட்டபூர்வ விருப்ப உயில் ஆகியவைகள் மூலம் வழங்கப்படுகிறது.

மதிப்புகள்

  • இரக்கம் – மற்றவர்களின் துன்பங்களில் அனுதாபம் காட்டுவது, அவர்களின் பிரச்சனைகளைப் பொறுமையுடன் கேட்பது, அவைகளை ஏற்றுக்கொண்டு, அவர்களின் தேவைகளுக்கு தீவிரமாக பதிலளிப்பது ஆகியவை அடங்கும்
  • கண்ணியம் – மற்றவர்களின் தனித்துவம், சூழ்நிலை மற்றும் அடுத்தவர் தெரிவுகள் ஆகியவற்றை நிலைநிறுத்துதல், மரணத்தை எதிர்கொள்ளும் போது அவர்களின் வாழ்க்கைக்கு மதிப்புக் கொடுத்தல் மற்றும் அவர்களின் உரிமைகளை மதித்தல்
  • சிறப்பானது – எங்கள் கவனிப்பில் உள்ளவர்களுக்கு எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பது மற்றும் தரமான கவனிப்பு, நெறிமுறை நடைமுறை, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மூலம் தலைமைத்துவத்தை வழங்க முயற்சித்தல்
  • துணையாதல் – தொடர்ச்சியான கவனிப்பைக் கொடுக்க மற்றவர்களுடன் சேரும்போது வாடிக்கையாளருக்கு கட்டுப்பாட்டைக் கொடுப்பது

 

கருணைக்கொலை பற்றிய அறிக்கை

கருணைக்கொலை பற்றிய ஈஸ்டர்ன் பாலியேட்டிவ் கேர் அறிக்கை பின்வருமாறு.

ஈஸ்டர்ன் பாலியேட்டிவ் கேர்:

  1. ஆயுளைக் குறைக்கும் நோயுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை, மருத்துவ மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார சேவைகளை வழங்கும் கவனிப்பின் ஒரு கூறாக பாலியேட்டிவ் கேர் வரையறுக்கப்படுகிறது. இந்த கவனிப்பு அந்த நபரின் விருப்பத்திற்கேற்ற சூழலில், முடிந்தவரை வழங்கப்படுகிறது. இந்த கவனிப்பானது நோயாளிகள், குடும்பங்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு உடல், உளவியல், சமூக, உணர்வு மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்குகிறது. பாலியேட்டிவ் கேர் சேவைகளின் நோக்கம் நோயாளியின் வாழ்நாளிலும் நோயாளியின் மரணத்திற்குப் பிறகும் நோயாளி மற்றும் குடும்பத்தினர் மற்றும் பிற கவனிப்பாளர்களுக்கு ஏற்படும் வருத்தம் மற்றும் இறப்பினால் உண்டான வேதனை ஆகியவற்றிற்கான ஆதரவும் அடங்கும்.
  2. அத்தகைய சேவைகள் தேவைப்படும் அனைவருக்கும் அனைத்து பாலியேட்டிவ் கேர் சேவைகளும் கிடைக்க வேண்டும் என்றும் தரமான பாலியேட்டிவ் கேர் சேவைகளுக்கு போதுமான நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறது.
  3. இறப்பது என்பது ஒரு இயற்கையான செயல் என்றும், அதிக சுமையான அல்லது பயனற்ற சிகிச்சையைக் குறைப்பது அல்லது திரும்பப் பெறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்றும் நம்புகிறது.
  4. நோயாளியே கேட்டுக் கொண்டாலும் கூட, வேண்டுமென்றே வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதை பாலியேட்டிவ் கேர் நடைமுறையில் அடங்காது என்று கூறுகிறது. எவ்வாறாயினும், வாடிக்கையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன், அவர்களின் மதிப்புகள், இலக்குகள் மற்றும் துன்பத்தின் தன்மை குறித்து வெளிப்படையான கலந்துரையாடலுக்கு அழைக்கிறோம்.
  5. உடல் வலியைக் குறைப்பதற்கும் சமூக மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குவதற்கும் பாலியேட்டிவ் கேர் மூலம் அதிகம் பயன் அடைய முடியும் என்பதையும், மனித துன்பம் பெரும்பாலும் ஒரு சிக்கலான மற்றும் கடினமான நிகழ்வாகும் என்பதையும் ஒப்புக்கொள்கிறது.
  6. சிலர் வேண்டுமென்றே வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமாகவோ அல்லது பயனற்ற சிகிச்சையை கோருவதன் மூலமாகவோ இறக்கும் செயலைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். மற்றும் பாலியேட்டிவ் கேர் ஆனது வேண்டுமென்றே வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக சிலர் அஞ்சக்கூடும் என்பதை உணர்கிறது. பாலியேட்டிவ் கேர் இன் பங்கு, நியாயமான வழிகளில் அசௌகரியத்தை நீக்குவதற்கும் நிவாரணம் வழங்குவதாகும் மற்றும் இறக்கும் தருவாயில் உள்ள நபரை ஆதரிப்பதும் ஆகும். மரணம் எப்போது நிகழும் என்பதை தீர்மானிப்பது அல்ல என்பதையும் ஒப்புக்கொள்கிறது.
  7. ஆஸ்திரேலிய சமுதாயத்தில் கருணைக்கொலை பற்றிய வேறுபட்ட கருத்துக்கள் பரவலாக இருப்பதையும், மரணம் மற்றும் இறக்கும் தருவாயில் இருத்தல் பற்றிய பல ஆதாரமற்ற அச்சங்கள் உள்ளது, இதனால் இறக்கும் தருவாயில் வாழும் மக்களுக்கு பாலியேட்டிவ் கேர் வாழ உதவுவது பற்றிய தகவலறிந்த பதிலை வழங்குவது அவசியமாகிறது என்பதை உணர்கிறது.
  8. சமூகம் மற்றும் உடல் நல நிபுணர்களுக்குள், மேம்பட்ட கவனிப்பு திட்டமிடல் உட்பட மரணம் மற்றும் மரணித்துக் கொண்டிருப்பதின் அனைத்து அம்சங்கள் பற்றிய திறந்த மற்றும் வெளிப்படையான விவாதங்களையும் பாலியேட்டிவ் கேர் பற்றிய துல்லியமான தகவல்களை அந்த விவாதங்கள் அடிப்படையாகக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் வரவேற்கிறது.
  9. தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்படக்கூடிய உள்ளார்ந்த அபாயங்கள் காரணமாகவும், இது ஆஸ்திரேலியாவில் பாலியேட்டிவ் கேர் நெறிமுறைகளை சமரசம் செய்வதாக இருப்பதாலும், கருணைக்கொலை அல்லது தற்கொலைக்கு உதவுவதை நடைமுறைப்படுத்துவதையும் சட்டப்பூர்வமாக்குவதையும் எதிர்க்கிறது.
  10. சமூகம் மற்றும் உடல் நல நிபுணர்களுக்குள், மேம்பட்ட கவனிப்பு திட்டமிடல் உட்பட மரணம் மற்றும் மரணித்துக் கொண்டிருப்பதின் அனைத்து அம்சங்கள் பற்றிய திறந்த மற்றும் வெளிப்படையான விவாதங்களையும் பாலியேட்டிவ் கேர் பற்றிய துல்லியமான தகவல்களை அந்த விவாதங்கள் அடிப்படையாகக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் வரவேற்கிறது.
  11. தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்படக்கூடிய உள்ளார்ந்த அபாயங்கள் காரணமாகவும், இது ஆஸ்திரேலியாவில் பாலியேட்டிவ் கேர் நெறிமுறைகளை சமரசம் செய்வதாலும், தன்னார்வ உதவியுடன் இறப்பு மற்றும் கருணைக்கொலையை நடைமுறைப்படுத்துவதையும் சட்டப்பூர்வமாக்குவதையும் எதிர்க்கிறது.
  12. தன்னார்வ உதவியுடன் இறப்பதை ஆராய்வதற்கோ அல்லது அணுகுவதற்கோ அவர்கள் தேர்வுசெய்தாலும், தேர்வுசெய்யாவிட்டாலும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் EPC உறுதிபூண்டுள்ள அக்கறை, ஆதரவு மற்றும் மரியாதை ஆகியவற்றை வழங்கும்.

பாலியேட்டிவ் கேரின் பொருள் வரையறைக்கு, செப்டம்பர் 2015 இல் உலக சுகாதார அமைப்பின் பொருள் வரையறையைப் பார்க்கவும்: உலக சுகாதார அமைப்பு

பாலியேட்டிவ் கேரின் வரையறை

[அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மைக் குழு 28 செப்டம்பர் 2015]

 

தன்னார்வ உதவியுடன் இறப்பது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: மருந்தின் முறை மற்றும் தன்னார்வ உதவியுடன் குறிப்பிட்ட நபரை இறக்க வைப்பதற்கான நடைமுறை மற்றும் முறையான மதிப்பீடு மற்றும் அவ்வாறு நடைமுறைப்படுத்துவதில் நியாயமான முறையில் தொடர்புடைய படிகள் ஆகியவை அடங்கும்.

கருணைக்கொலை பற்றி EPC நெறிமுறைகளில் இவ்வாறு வரையறுக்கப்பட்டிருக்கிறது: – கருணைக்கொலை என்பது என்னவென்றால் அதன் மூலம் எந்தவொரு செயலையும் அல்லது விடுபடுதலையும், தானாகவோ அல்லது வேண்டுமென்றோ, எல்லாவித துன்பத்தையும் நீக்கும் நோக்கத்துடன் மரணத்தை ஏற்படுத்துவது.

 

EPC தனியுரிமை

ஒவ்வொரு நபரின் தகவல்களும் சட்டப்படியும் மற்றும் அவர்களின் தனியுரிமையை மதிக்கும் வகையிலும் நிர்வகிக்கப்படுவதற்கான உரிமைகளை ஈஸ்டர்ன் பாலியேட்டிவ் கேர் [EPC] மதிக்கிறது. வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தனியுரிமையை EPC மதிக்கிறது.

ஈஸ்டர்ன் பாலியேட்டிவ் கேர் என்ன தகவல்களை சேகரிக்கிறது?

வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தரமான சேவைகளை வழங்குவதற்காக EPC தேவையான தகவல்களை மட்டுமே சேகரிக்கிறது. இந்த தகவலில் தொடர்பு விவரங்கள், தனிப்பட்ட மற்றும் மருத்துவ தகவல்கள் உள்ளன. ஒரு வாடிக்கையாளர் பரிந்துரை பெறப்பட்ட நேரத்திலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நேரம் வரை இந்த தகவல் சேகரிக்கப்படுகிறது. கீழே கண்டவற்றுடன் இணங்க தனிப்பட்ட தகவல்களை EPC சேகரிக்கிறது:

  • சுகாதார பதிவு சட்டம் 2001 (காமன்வெல்த்)
  • தனியுரிமை சட்டம் 1988 (காமன்வெல்த்)
  • ஆஸ்திரேலிய தனியுரிமைக் கோட்பாடுகள் (காமன்வெல்த்)

தகவல்களைப் பகிர்தல்

பாலியேட்டிவ் கேர் சேவைகளை வழங்குதல் மற்றும் / அல்லது சட்டப்படி தேவைப்பட்டால் ஒழிய, EPC ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாடிக்கையாளரின் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில்லை அல்லது விவாதிக்க மாட்டார்கள். வாடிக்கையாளர் அல்லது அவர்களின் பிரதிநிதியின் ஒப்புதல் தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு பெறப்படுகிறது.

அடையாளம் காணப்படாத தகவல்கள், சுகாதார மற்றும் மனித சேவைகள் துறைகள் மற்றும் பிற அரசு துறைகளுக்கு கேட்டுக் கொண்டபடி தேவையான அல்லது தர மேம்பாட்டு நோக்கங்களுக்காக வழங்கப்படலாம்.

 

உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகி சரிசெய்தல்

தனியுரிமை அதிகாரியாக இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எழுதுவதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் தங்கள் தகவல்களை அணுகலாம். ஒரு நபர் அந்த நபரைப் பற்றி EPC வைத்திருக்கும் தகவல்களைத் திருத்தலாம். திருத்தம் கோரும் அனைத்து கோரிக்கைகளுக்கும், கோரிக்கையின் முடிவை அறிவுறுத்தி EPC எழுத்துப்பூர்வ பதிலை வழங்கும்.

 

புகார் செய்வது எப்படி

ஒரு நபர் EPC தனது தனியுரிமை உரிமைகளை மீறியதாக நம்பினால், அவர் அல்லது அவள் EPC ஐ தொடர்பு கொள்ளலாம்:

தொலைபேசி1300 130 813

மின்னஞ்சல்epccip@epc.asn.au

EPC புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு,நியாயமான மற்றும் சரியான நேரத்தில் பதில் வழங்க உறுதிபூண்டுள்ளது.

EPC இன் பதிலில் திருப்தியடையவில்லை என்றால், நேரடியாக புகார் அளிக்கலாம்:

 

ஆஸ்திரேலிய தகவல் ஆணையர் அலுவலகம்

GPO பெட்டி 5218

சிட்னி NSW 2001

தொலைபேசி1300 363 992

மின்னஞ்சல்enquiries@oaic.gov.au

 

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

நீங்கள் மேலும் தகவல் பெற விரும்பினால் 1300 130 813 என்ற எண்ணில் EPC தனியுரிமை அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும்.